Breaking News
recent

தென் இந்தியர்கள்தான் இந்தியாவின் முதல் குடிமக்கள்

தென் இந்தியர்கள்தான் இந்தியாவின் முதல் குடிமக்கள்



புதிய மரபியல் ஆய்வில், தென் இந்தியர்கள்தான் தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.



தொன்மையான இந்தியா


உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் பல்வேறு இன மக்கள் வசிக்கிறார்கள். பல்வேறு மொழி, இனம், மதத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருவது இந்தியாவின் தனிச்சிறப்பு ஆகும். இதனால்தான் அறிஞர்கள் இந்தியா உலக கலாசாரங்களின் தாய் வீடு என்று கூறுகிறார்கள்.



இதைப்போலவே , இந்திய மக்கள் மிகவும் தொன்மை வாய்ந்தவர்கள் என்பது அனைவரின் கருத்து. அய்தராபாத்தில் உள்ள சென்டர் பார் செல்லுலார் மற்றும் மாலிகுலர் பயாலஜி (சி.சி.எம்.பி.) என்ற ஆய்வு மய்யத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளான கே. தங்கராஜ், லால்ஜி சிங் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக இந்திய மக்களின் தோற்றம் குறித்து மரபியல் ஆய்-வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவர்கள், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல், ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த், பிராட் இன்ஸ்டிடியூட் ஆப் ஹார்வர்டு மற்றும் எம்.அய்.டி ஆகிய ஆய்வு மய்யங்களுடன் இணைந்து நடத்திய மாபெரும் ஆராய்ச்சியின் முடிவுகளை விஞ்ஞான உலகின் ஆய்வுப்பத்திரிகையான நேச்சர் வெளியிட்டு உள்ளது.


தொன்மையான இருபிரிவினர்



மரபியல் தொடர்பான ஆராய்ச்சியின்-போது இந்த ஆய்வுக்குழுவினர், இந்தியாவின் 15 மாநிலங்களைச் சேர்ந்த 25 வெவ்வேறு ஜாதி மற்றும் பழங்-குடியின மக்களின் மரபணுக்களில் ஏற்படக்கூடிய சுமார் 5 லட்சம் மூலக்-கூறு மாற்றங்களை முதல் முறையாக ஆராய்ந்து உள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகளை பல்வேறு கோணங்களில் விரிவாக ஆராய்ந்து பார்த்ததில், பழை-மையான இந்தியாவில் மிகவும் தொன்-மையான 2 பிரிவினர் இருந்திருக்கக்-கூடும் என்று கருதுகிறார்கள்.



இந்த தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென் இந்திய மூதாதையர் என்றும் அழைக்கிறார்கள். மேலும் தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்-கள் அனைத்தும் இந்த 2 தொன்மை-யான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.



முதல் குடிமக்கள்



இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் அய்ரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40_முதல் 80 சதவிகிதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.




ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்க-ளோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்-மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.


இதில் ஆச்சரியமூட்டும் உண்மை என்னவென்றால், அந்தமானில் வசிக்கும் மிகப் பழங்குடியினரான ஒன்கே என்று அழைக்கப்படும் பிரிவினர் இவ்விரு தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும் தொன்மை-யான தென்இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்பது இவர்களுடைய ஆய்வின் முடிவு ஆகும்.


இதன்மூலம், தொன்மையான தென்இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதை-யரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டு-களுக்கு முன்பு பிரிந்து இருக்கக்கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து.



அந்தமான் பழங்குடியினர்தான் முதன்முதலில் ஆதிமனிதன் தோன்றிய இடமான ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தெற்குக் கடற்கரை வழியாக சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறியவர்கள் என்று விஞ்ஞானி-கள் கே. தங்கராஜ், லால்ஜி சிங் ஆகி-யோர் சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வு-செய்து தெரிவித்த கருத்துகளை மற்றொரு விஞ்ஞான ஆய்வுப் பத்திரிகையான சயின்ஸ் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.



திருமணம்


இந்த ஆராய்ச்சியில் மற்றொரு முக்கிய அம்சத்தையும், அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். மிகப்பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் ஒவ்வொரு மனித இனப்பிரிவினரும் அவரவர் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதாலும், தமக்கே உரிய கலாசார பழக்க-வழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டதாலும், ஒவ்வொரு பிரிவினரும் மரபியல் மற்றும் கலாசார ரீதியாக தனித்தன்மை கொண்டு உள்ளனர்.



இதன் மூலம், பழங்காலத்தில் இருந்தே இந்திய மக்கள் இனம் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து கலப்பின்றி தனித்தன்மையுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரியவந்து உள்ளது. இந்த பிரிவினைதான் கலாசார பரிமாணங்களின் விளைவாக தற்காலத்தில் ஜாதி பாகுபாடாக உருவெடுத்துள்ளது என்றும் இந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.



மரபியல் ரீதியிலான நோய்கள்


பழங்காலத்தில் இருந்தே ஒவ்வொரு இனத்தினரும் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதால் ஒவ்வொரு இனத்தவருக்கும் ஏற்படும் வெவ்வேறு மரபியல் மாற்றங்கள் அவரவர் சந்ததிகளின் வழியாக அந்தந்த இனத்தினரிடையே நிலைபெற்ற, அதன் விளைவாக மரபியல் ரீதியிலான பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என்ற உண்மையையும் எடுத்துரைத்து இருக்கிறார்கள்.



இந்த ஆராய்ச்சியின் மூலம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இனத்தவருக்கும் நோய்க்கான மரபியல் மாற்றங்கள் வெவ்வேறாக இருக்கக்-கூடும் என்று இந்த விஞ்ஞானிகள் கருதுவதால், தற்போது பல்வேறு இனத்தவரையும் உட்படுத்தி தங்கள் ஆராய்ச்-சியைத் தொடர்ந்து மேற்கொள்வதில் மும்முரமாக உள்ளனர்.


நன்றி: தினத்தந்தி,
நாகர்கோவில், 25.9.2009
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.