Breaking News
recent

அதிரை காலணி கலவர வழக்கு: அப்பாவிகள் விடுதலை எப்போது? சி. நா. அ. சரபுதீன்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மாவட்ட முன்னாள் தலைவர் சி. நா. அ. சரபுதீன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
 
முன்பு அந்த நாற்பது பேரில் நீங்களும் ஒருவரா? என்ற கட்டுரை "அதிரை எக்ஸ்பிரசில் வந்ததை சகோதர் மு.அ.ஹாலிது மூலம் அறிந்தேன்., இந்த வழக்கில் என்னைத்தான் முதல் குற்றவளியாக பொய்வழக்கில் சேர்த்தனர்., அதில் குற்றவளியாக புனையப்பட்ட அனைத்து அப்பாவி சகோதர்களையும் வழக்கிலிருந்து விடுவிக்க பலசிரமங்களுக்கு இடையில் பாடுபட்டேன் இதற்க்கு இறுதியாக  செக்கடிமேட்டிலுள்ள தியாகி அப்பாஸ் ஹாஜியார் படிப்பகத்தை சேர்ந்த நண்பர்கள் குழுதான் முழு உதவி செய்தனர்., அல்ஹம்டுளில்லாஹ்.
 
அந்த உதவியின் மூலம் என்னுடன் வழக்கிற்கு ஒத்துழைத்த பதிமூன்று நபர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டனர். மீதமுள்ளவர்களுக்கும்  தகவல் கொடுத்தும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. பரவாயில்லை. இன்ஷா அல்லாஹ் இனி அவர்களுக்கு வாய்ப்புகள் அருகில் உள்ளது.  

 
இனி அவர்கள் மேற்குறிப்பிட்ட வழக்கிலிருந்து விடுதலை பெற விரும்பினால்., இன்ஷா அல்லாஹ் நான் முழுபொறுப்பையும் ஏற்று வழக்கை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருக்கின்றேன்.  
 
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் என்னுடைய வழக்கறிஞர் திரு நடராஜன் அவர்களே உடனடியாக 9443295916  என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு வழக்கிற்கு ஒத்துளைத்தால் போதும் அவரிடம் இதைப் பற்றி (வழக்கறிஞர் அவர்களுக்கு) தகவல் விரிவாக கொடுக்கப்பட்டு விட்டது.  

 
தங்களின் அன்புள்ள 
சி. நா. அ. சரபுதீன்
சிட்னி.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.