Breaking News
recent

அதிரையில் பெருநாள் பிறை தெரிந்தது!

அதிரைப்பட்டினத்தில் இன்று பிறை தெரிந்தது. எனவே நாளை (31-ஆகஸ்ட்-2011) பெருநாள் என்று (தஹ்லா) மரைக்காயர் பள்ளி மர்கஸில் முடிவு செய்தனர்.

சான வயல் திடலில் பெருநாள் தொழுகையை அதிரை ஈத் கமிட்டி நடத்துகிறது. இத் தொழுகை காலை 7.45 மணிக்கு நடை பெறும் என்று ஆட்டோ மூலம் பொது அறிவிப்பு செய்தனர்.

தக்வா பள்ளி,ஷாதுலியா புதுப்பள்ளி மற்றும் அல் அமீன் ஜாமிஆ பள்ளியில் காலை 8.30 மணிக்கும் பெருநாள் தொழுகை நடைபெறும்.
அதிகமான பள்ளிகளில் காலை 8.30 மணிக்கு தொழுகை நடத்த முடிவு செய்துள்ளனர். சில பள்ளிகளில் நேரம் வித்தியாப்படுகிறது.

அதிரைப்பட்டினத்தில் பெருநாள்  தொழுகை முடிந்தவுடன் அந்தந்த பள்ளிகளில் ஜும்ஆ - உரை நடைபெறும்.

தக்வாபள்ளியில் இஷா தொழுகைக்கு(இரவு8.30) பின் திக்ர் மஜ்லீஸ் நடை பெறும் என்று முஹல்லா வாசி அஜ்மீர் ஸ்டோர் சாகுல் ஹமீது தெரிவித்தார்.


அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர்
அல்லாஹ் அக்பர்
லாயிலாஹ இல்லல்லாஹ்
அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்
வலில்லாஹில் ஹம்து !






Unknown

Unknown

1 கருத்து:

  1. மரைக்காயர் பள்ளிக்கு தஹ்லா மரைக்காயர் என்ற பெயர்தான் உண்மையானது எனது நண்பர் அடிக்கடி கூறுவார் அதை மெய்ப்பிக்கும் வகையில் அதிரை போஸ்ட்டில் வந்த வுடன் 100%சதவீதம் நிருபணமாகியுள்ளது தஹ்லா என்ற பெயர் காலப்போக்கில் மறைக்கப்பட்டு இன்று மறைக்கா பள்ளி என மருவியுள்ளது ... ஆமா யாரு அந்த தஹ்லா மரைக்காயர் ? விளக்கம் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.