Breaking News
recent

பிரச்சினையைக் கையில் எடுக்கிறது முஸ்லிம் லீக்!

மகாராஷ்டிர காவல்துறையினரின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹமது கோரிக்கை 


மகாராஷ்டிர காவல் துறையினரின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் குறித்து ஒரு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும் மத்திய வெளியுறவு மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சரு மான இ.அஹமது கோரிக்கை விடுத்துள் ளார்.

மும்பையில் உள்ள சிறை களில் காவல் துறையினரின் பாரபட்சமான மனப்பான்மை காரணமாக 339 முஸ்லிம் இளைஞர்கள் எந்த குற்ற வழக் குத் தொடர்பும் இல்லாமல் வாழ்வ தாக மகாராஷ்டிர சிறைகளில் உள்ள முஸ்லிம்கள் குறித்து டாடா நிறுவனம் நடத்திய ஆய் வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

முஸ்லிம்களின் கல்வி மற் றும் வாழ்க்கைத்தரம் குறித்து ஆய்வு நடத்திய சச்சார் கமிட்டி அறிக்கையில் மகாராஷ்டிர மாநி லத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 10.6 சதவீதம் என்றும், ஆனால் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக் கையில் 32.4 பேர் முஸ்லிம்கள் என்றும், ஓர் ஆண் டுக்குள் சிறையில் இருக்கும் முஸ்லிம் கள் எண்ணிக்கை 42 சதவீதம் என்றும் சுட்டிக் காட்டியது.

மக்கள் தொகையின் விகி தாச்சாரத்தில் பொருந்தும்படி இல்லாமல் இப்படி மகாராஷ்டிர மாநில சிறைச் சாலைகளின் புள்ளி விவரம் காரணமாக அது குறித்து உரிய ஆய்வு நடத்தி உண்மையை வெளிக் கொணர வேண்டும் என மகாராஷ்டிர அரசுக்கு மாநில சிறுபான்மை கமிஷன் வலியு றுத்தியது. 
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.