Breaking News
recent

பட்டுக்கோட்டைக்கு கூடுதல் நீதிபதி

பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், கூடுதல் விரைவு நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இயங்கி வந்த கூடுதல் விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்களாக தரம் உயர்த்தப்பட்டது.


2011ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியோடு பட்டுக்கோட்டை கூடுதல் விரைவு நீதிமன்றத்திற்கு நீதிபதியாக இருந்த ஆர்.கணேசன் பணி மாறுதலாகி திருச்சிக்கு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து இந்த நீதிமன்றத்திற்கு கடந்த 16 மாதங்களாக நீதிபதி பணியிடம் காலியாக இருந்து வந்தது. 

தற்போது இந்த கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்திற்கு நீதிபதியாக ஆர்.சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக இருந்து பணி மாறுதலாகி வந்துள்ளார். 
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.