Breaking News
recent

வாகன விபத்தில் பலியான நசீம் ஜனாஸா,இஷாவுக்குப்பின் மரைக்காப்பள்ளியில் நல்லடக்கம் (படங்கள் இணைப்பு)

போஸ்ட்மார்ட்டம் செய்யும் இடத்தில்..ஜன்னல் வழியாக‌

அதிரை நெசவு தெரு பூனாச்சுக்கொட்டை வீட்டைச் சேர்ந்த அப்துல் காதர் அவர்களின் மகன் முகமது நசீம்(14) இவர் காதர்முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.

இன்று பிற்பகல் மூன்று  மணியளவில் பெரிய கடைதெரு வழியாக நசீம் சென்றுக் கொண்டு இருந்த போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த டிராக்டர் நசீமின் தலைமேல் ஏறி இறங்கியது.

இதனால் ஆபத்தான நிலையில் இருந்த நசீமை தமுமுக ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர்.அப்படி செல்லும் வழியிலேயே உயிர் இழந்துவிட்டார்.(இன்னாலிலாஹி...)

அவரது உடல் நமதூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது.

சகோதரர் நசீம் அவர்களின் ஜனாஸா, இன்று இரவு இஷா தொழுக்குப் பின் மரைக்காயர் பள்ளி கப்ரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.


டிரைவர் எங்கே..?

சகோதரர் நசீம் பலியாவதற்கு காரணமான டிராக்டர் டிரைவர் அதிராம்பட்டினம் காவல்துறையிடம் சரணடைந்ததை தொடர்ந்து வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

விபத்து ஏற்படுத்திய டிராக்டர்
விபத்து நடத்த இடத்தில் மக்கள்






Unknown

Unknown

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.