Breaking News
recent

இளையோர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

 நேரு இளையோர் விருதுபெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் தெரிவித்துள்ளது:
மன்றங்களின் தன்னலமற்ற சேவைகளை பாராட்டவும், ஊக்கப்படுத்தவும் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான இளையோர் மன்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மன்றத்திற்கு மட்டுமே இவ்விருது வழங்கப்படும். விருதாக ரூ.10 ஆயிரமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மன்றம் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டால் ரூ.25 ஆயிரமும், தேசிய அளவில் தேர்வு பெற்றால் ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் கிடைக்க வாய்ப்புள்ளது.

நேரு யுவகேந்திராவுடன் இணைக்கப்பட்டுள்ள இளைஞர், மகளிர் மன்றங்கள், மாநில சங்க சட்டத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் பெற்று, 2012-13ம் நிதியாண்டில் (1.4.2012- 31.3.2013) மன்றம் செய்துள்ள நற்பணிகளை தக்க ஆதாரங்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 16ம் தேதி கடைசி நாளாகும். 

விண்ணப்பங்களை மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர், நேரு யுவகேந்திரா, 468, நேதாஜி நகர், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, தஞ்சை- 5 என்ற முகவரிக்குஅனுப்பவேண்டும். மேலும¢ விவரங்களுக்கு 04362- 227755 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.