நமதூர் பிலால் நகர் வழியே செல்லும் E.C.R சாலையில் அமைந்திருக்கும் பாரத் பெட்ரோல் பங்கு எதிரில் காலை 10:45 மணியளவில் வேகமாக வந்த காரும் ட்ராக்டரும் பயங்கரமாக மோதின இதில் அந்த கார் முற்றிலும் சேதமடைந்தது.மேலும் காரில் பயணம்
செய்தவரின் பெயர் மாலிக் என்றும் அவரின் திருமணத்துக்காக அவருடைய நண்பர்களுடன் காரில் செல்லும் போது வேகமாக வந்த ட்ராக்டர் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரித்ததில் தெரிகிறது. இதில் காருக்கு பின்னால் வந்துக்கொண்டிருந்த மாலிகின் நண்பர் அபூதாஹிர் காயமடைந்தார்.
விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.அதிரையில் ஏற்பட்ட இந்த சாலை விபத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
நன்றி:அதிரை பிறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்