Breaking News
recent

அதிரையில் நாசம் செய்யும் காட்டுபன்றிகள்!

அதிராம்பட்டினம் அருகே அடர்ந்த அலையாத்தி காடுகள் உள்ளன. காடுகளை ஒட்டி முடுக்குக்காடு, கரிசக்காடு, கருங்குளம், வள்ளிக்கொல்லைக்காடு, மஞ்சவயல், மறவக்காடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன.
அனைத்து கிராமத்திலும் விவசாயம் செய்து அறுவடைக்கு வரும் பக்குவத்தில் உள்ளன. இந்த நிலையில் அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து கதிர்களை தின்றுவிடுகிறது. அதோடு அப்பகுதியை மிதித்து நாசப்படுத்துகிறது.
கூட்டம் கூட்டமாக காட்டுப்பன்றிகள் வருவதை பார்த்து விவசாயிகள் பயப்படுகின்றனர். இக்காட்டு பன்றிகள் இரவு 12 மணிக்கு மேல்தான் விவசாய நிலங்களுக்குள் புகுகிறது.
நள்ளிரவு நேரத்தில் காட்டுப் பன்றிகள் வருவதை அறிந்த விவசாயிகள் வயல்களில் குடிசைபோட்டு காவல்காத்து வருவதோடு பன்றிகள் வராமல் பட்டாசு வெடித்து வருகின்றனர். சில விவசாயிகள் வயல்களில் விளக்கை எரிய வைக்கின்றனர். சில விவசாயிகள் வயல்களில் மனிதர்கள் சட்டையை கம்பில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளனர். சில விவசாயிகள் டின்களை கம்பால் அடித்து ஓசை எழுப்பி வருகின்றனர்.
அறுவடைக்கு இன்னும் 15 தினங்கள் உள்ளதால் விவசாயம் செய்யப்பட்ட விவசாயிகள் இரவு முழுவதும் கண் விழித்து பன்றிகளை புகவிடாமல் பாதுகாத்து வருகின்றனர். காவல் இல்லாத வயல்களில் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
எனவே மாவட்ட வன அலுவலர் பன்றிகளை விவசாய நிலங்களுக்குள் புகவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ரெகுநாதன் கூறுகையில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்த நிலையில் பாடுபட்டு மிகவும் சிரமப்பட்டு விவசாயம் செய்து அறுவடைக்கு இன்னும் 10 தினங்கள் உள்ளன.
இந்த நிலையில் அலையாத்திக் காடுகளிலிருந்து காட்டுப்பன்றிகள் நிலங்களுக்குள் புகுந்து கதிர்களை மேய்கின்றன. விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகளை புகவிடாமல் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதோடு வனவிலங்குகள் கிழக்கு கடற்கரை சாலையை கடந்து விவசாய நிலங்களுக்கு வரும்போது சில பன்றிகள் வாகனத்தில் அடிப்பட்டு இறந்து விடுகின்றன. எனவே வனத்துறை அதிகாரிகள் காடுகளைவிட்டு வனவிலங்குகள் வராமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.