![]() |
ஒற்றுமை இருந்தா எல்லா சீட்டு நமக்குதான்! |
1) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
2) ஆம்பூர்
3) இராமநாதபுரம்
இ.யூ.முஸ்லிம் லீக்:திமுக கூட்டணி
1) வாணியம்பாடி
2) நாகப்பட்டினம்
3) துறைமுகம்
எஸ்.டி.பி.ஐ: கூட்டணியின்றி...
(எஸ்.டி.பி.ஐ.1௦ தொகுதிகளில் போட்டியிடுகிறது முதல்கட்டமாக 6 தொகுதிகளை அறிவித்துள்ளனர்.)
1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்)
2.இராமநாதபுரம்
3.பூம்புகார் (நாகை மாவட்டம்)
4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்)
5.துறைமுகம் (சென்னை) ஆகிய ஐந்து தொகுதிகளும்
6.நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம்)
நேருக்கு நேர்...
மனிதநேய மக்கள் கட்சியும் எஸ்.டி.பி.ஐயும் இராமநாதபுரம் தொகுதியிலும் துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயும் இ.யூ.முஸ்லிம் லீக்கும் நேருக்கு நேர் நின்று முஸ்லிம்களின் வாக்கை சிதறடித்து மூன்றாம் நபரை தேர்வு செய்ய வழி அமைத்திருக்கின்றன.
இதில், மனிதநேய மக்கள் கட்சியும் இ.யூ.முஸ்லிம் லீக்கும் முறையே எதிர் கட்சி ஆளுங்கட்சியில் பல சுற்று பேச்சு வார்த்தை நடத்தி இந்த தொகுதிகளை பெற்றுள்ளார்கள்.
ஆனால், எஸ்.டி.பி.ஐக்கு அப்படியோரு நிர்பந்தம் இல்லை. சுயமாகவே அறிவித்தது. எனவே முஸ்லிம்களின் ஒற்றுமை,பிரதிநித்துவம் கருதி முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடாத வேறு தொகுதியை தேர்வு செய்து களம் காணவேண்டும்.
தமிழகத்தில் 60 தொகுதிகள் முஸ்லிம்களுக்கு சாதகமானவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.அந்த 60 தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐயும் அதன் சார்ப்பு அமைப்புகளும் பலமாகவே இருக்கிறது என்பது நாடறிந்த உண்மைதான்.
எஸ்.டி.பி.ஐ சமுதாய ஒற்றுமை, பிரதிநித்துவம் கருதி வேறு தொகுதியை தேர்வு செய்யுமானால், அந்த தொகுதியில் இருக்கும் மமகவினரும் லீக்கர்களும் கூட எஸ்.டி.பி.ஐக்கு வாக்களிப்பார்கள் சமுதாயமும் முழு ஆதரவை தந்து சட்டமன்றத்திற்கு வாழ்த்தி அனுப்பும். இன்னும் சொன்னால், இதுவே சமுதாய அரசியல் கட்சிகளின் ஒற்றிமைக்கும் அடித்தளமாகவும் முன்மாதிரியாகவும் அமையும். இன்ஷாஅல்லாஹ்!
ஆக்கம் :ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்
அப்படி என்றால் தி மு க மற்றும் விடுதலைப் புலிகள் கட்சிகளில் போட்டியிடும் முஸ்லீம் வேட்பாளர்களின் நிலைமை என்ன? எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் மாற்று மதத்தினர் என்றால் உங்கள் நிலைமை என்ன?
பதிலளிநீக்குஅப்படி என்றால் தி மு க மற்றும் மற்ற கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களின் நிலை என்ன? எதிர்த்து நிற்பவர் மாற்று மதத்தினராக இருக்கும் பட்சத்தில் எதனை ஆதரிக்கச் சொல்வீர்கள் அப்துல் கபூர் அபுதாபி இது எனது சொந்தக் கருத்து
பதிலளிநீக்குசிறந்த எண்ணத்தின் வெளிப்பாடு இது .
பதிலளிநீக்குசிந்தித்தால் இவர்களை சமூகம் மெச்சும்
செய்வார்களா?
சகோதரர் ஹிதாயத்துல்லாவின் அரிய ஆக்கத்தை SDP அவசரமாக ஆராய வேண்டிய தருணம் இதுவே
பதிலளிநீக்கு