Breaking News
recent

அதிமுகவை ஆதரிக்க திமுமுக முடிவு

அதிமுகவை ஆதரிக்க திமுமுக முடிவு


வேலூர், மார்ச் 29: வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்க என்று திராவிட முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (திமுமுக) முடிவு செய்துள்ளது.

வேலூர் ஆசிரியர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திமுமுக-வின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

அதிமுக கூட்டணி போட்டியிடும் 40 தொகுதிகளிலும் திமுமுக தொண்டர்கள் கடுமையாக உழைத்து வெற்றிக்கு வழி வகுப்பது. இசைத்துறையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஏ.ஆர். ரஹ்மானுக்கு இக் கூட்டம் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.

வேலூர் கோட்டையில் உள்ள மசூதியை தொல்பொருள் துறையிடம் இருந்து சட்ட ரீதியாக பெற்று, 5 வேளை தொழுகை நடத்த ஏற்பாடு செய்ய கட்சி சார்பில் நிபுணர் குழு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஷான்மாபீ கட்சியில் இணைந்தார்.

கூட்டத்துக்கு மாநிலப் பொதுச்செயலர் ஜி.எஸ். இக்பால் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ. அப்சல், மேற்கு மாவட்டத் தலைவர் ப. பஷீர் அகமது, மாவட்டப் பொறுப்பாளர் அப்சர், பொருளாளர் கரீம்கான், மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலர் சலீம்பாய், வடசென்னை மாவட்டச் செயலர் நியாஸ், ஆம்பூர் நகரச் செயலர் பி. சித்திக், மகளிர் அணிச் செயலர் ஜாகிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.