4வது நாளாக நாளையும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாம்!



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிரை கிளை கடந்த மூன்று நாட்களாக செக்கடி மேட்டில் உள்ள எஸ்.டி.பி.ஐயின் மாவட்ட அலுவலகத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாமை நடத்தி வருகிறது. இன்றுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டது.


மூன்று நாட்களும் ஆண்களும் பெண்களும் கட்டுகடங்காத கூட்டமாக வந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேவைகளை பெற்றனர்.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்களும் பொருமையாகவும் நிதானமாகவும் அதே நேரத்தில் துரிதமாகவும் சேவைகளை செய்தனர். என்றபோதும், இன்னும் அதிரையின் பலப்பகுதியிலிருந்து மக்கள் வரவேண்டியுள்ளது. 


என்பதை கருத்தில் கொண்டு, 4வது நாளாக நாளையும்(10/07/12 செவ்வாய்கிழமை) கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாம் நீட்டிகப்பட்டு நடைபெற இருக்கிறது.என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகரத் தலைவர் சலீம் அதிரை போஸ்ட்டிடம் தெரிவித்தார்.


கல்வி உதவித்தொகை பெறத் தகுதிகள்
1. மாணவ /மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.  
2. மாணவ /மாணவியரின் முந்தைய மதிப்பெண் 50% சதவிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.
3. ஒரு குடும்பத்தில்  இரண்டு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க வரும்போது கண்டிப்பாக கொண்டுவர வேண்டியவைகள்:
1. முகவரிச் சான்றிதழ் நகல் (ரேசன் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை)
2. மாணவ /மாணவியரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு 
3. சாதிச் சான்றிதழ் நகல்
4. வருமானவரிச் சான்று அல்லது ரூ.10 மதிப்புள்ள நிதிமன்ற சாரா முத்திரை தாளில்  மாணவ /மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உறுதி பிரமாண பத்திரம்.
5. மாணவ /மாணவியரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி சேமிப்பு  கணக்கின் நகல்.
தொடர்புக்கு: 9842716214,9042455496. 
நிகழ்ச்சி நடைபெறும் இடம்:
SDPI  அலுவலகம் அருகில்,
செக்கடிமேடு, நடுத்தெரு 
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.