அதிரைநிருபர் பதிப்பகம் முதல் நூல் வெளியிடு - காணொளி



அதிரைநிருபர் பதிப்பகத்தின் முதல் வெளியீடான "மனுநீதி மனிதகுலத்துக்கு நீதியா? என்ற நூல் நேற்று மாலை வெளியிடப்பட்டதை அறிவீர்கள்.

அழகிய மாலைப் பொழுதில் எளிமையாக நடந்த அந்த நிகழ்வின் காணொளித் தொகுப்பினை இங்கே பதிவதில் மகிழ்வடைகிறோம் !



நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு வருகைதந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கருத்தாடல்கள் வழியாக வாழ்த்துரையும் துஆவும் வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அதிரைநிருபர் பதிப்பகம் இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த புத்தங்களை வெளியிட ஆயத்தமாகிறது அந்த வரிசையில், ஏற்கனவே சகோதரர் S.அலாவுதீன் அவர்களால் எழுதி தொடராக வெளிவந்து அனைவரின் பெரும் பாராட்டைப் பெற்ற 'கடன் வாங்கலாம் வாங்க'

அடுத்து சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்களால் எழுதி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் உறங்கும் உணர்க்வுகளைத் தட்டி எழுப்பும் 'படிக்கட்டுகள்' தொடர்.

மேலும் அதிரை நிருபரின் ஆஸ்தான கவி சபீர் அபுஷாருக் அவர்கள் எழுதி அதிரை நிருபரில் வெளிவந்த கவிதைத் தொகுப்பு.

விரைவில் நூல் வடிவம் பெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !

நேற்றைய நூல் வெளியீட்டு நிகழ்வின் புகைப்படங்கள் மேலும் இதோ உஙகளின் பார்வைக்கு.







அதிரைநிருபர் பதிப்பகம்


Unknown

Unknown

Related Posts:

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.