Breaking News
recent

தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் 20–ந் தேதி தொடங்குகின்றன

தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் வருகிற 20–ந் தேதி தொடங்குகின்றன.

செய்முறை தேர்வுகள்

திருச்சி அரசுத்தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் லட்சுமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

மார்ச் 2013–ல் நடைபெற உள்ள இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத்தேர்வினை முதன் முறையாக எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தேர்வர்கள் தாங்கள் அறிவியல் பாட செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்ட பள்ளியிலேயே செய்முறை தேர்வுகளுக்கும் வருகை புரிதல் வேண்டும். செய்முறை தேர்வுகள் வருகிற 20–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை அனைத்து வேலைநாட்களிலும் (சனிக்கிழமைஉள்பட) காலை, மாலை என இருவேளைகளிலும் நடைபெறும்.

செய்முறை தேர்வுகளில் கலந்து கொள்ள தேர்வு கூட அனுமதி சீட்டினை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் வருகிற 18, 19, 20 ஆகிய தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம். செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான செய்முறை நோட்டு புத்தகத்தை தவறாது செய்முறை தேர்வு மையத்தில் காண்பிக்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய தேர்வுக்கூட அனுமதி சீட்டு பின்னர் தனியே விநியோகிக்கப்படும்.

இதர விவரங்களுக்கு...

இதற்கான நாட்கள் செய்தி குறிப்பு மூலம் பின்னர் அறிவிக்கப்படும். புகைப்படத்துடன் கூடிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கப்பட்ட தேர்வர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் நடைபெறும் நாட்கள் மற்றும் இதர விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களை அணுக வேண்டும். செய்முறை தேர்வு குறித்து தனிப்பட்ட முறையில் தனித்தேர்வர்களுக்கு அறிவிப்பு எதுவும் அனுப்ப இயலாது.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Unknown

Unknown

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    தகவலுக்கு நன்றி


    அதிரை பேரூராட்சி நிறுவாகத்தின் குறைகள் சம்பந்தமாக தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களை தொடர்பு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் இந்த மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
    இந்த கருத்தை படிப்பவர்கள் உங்களுடைய நன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

    adiraichairmanaslam@gmail.com

    தொலைப்பேசி 9566008588

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.