அதிரை கல்லுக்கொல்லையைச் சேர்ந்த ஃபைசல் என்ற 29 வயதுவாலிபர் மீது மர்ம கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான செய்தி
நேற்று(12/11/13) இரவு நடந்த இச்சம்பவத்தில் ஃபைசல் கடுமையாக காயமுற்று நமதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்த ரூபாய் 40,000 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான செய்தி
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நமது நிருபர் ஃ பைசல் அவர்களிடம் கேட்டதற்கு:
"நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் நடுத்தெருவின் சாலையில் நின்றுகொண்டு இருந்தபோது இரு சக்கர வாகனங்களில் படு வேகமாக சென்ற இரு வாலிபர்களை குழந்தைகள்,வயதானவர்கள்,பொதுமக்கள் என பலரும் அதிகமாக நடமாடும் இப்பகுதியில் வேகமாக செல்ல வேண்டாம் என்று நல்ல முறையில் கூறினேன். அதற்க்கு அவர்கள் என்னை தகாத வார்த்தைகளில் திட்டிவிட்டு போய் விட்டனர்.இது குறித்து அவர்கள் இருக்கும் இடத்திற்குசென்று நல்லதற்கு தானே சொன்னேன் இதற்கு ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் திமிராக பேசிவிட்டு ஆட்களை வைத்து என்னை பலமாக தாக்கிவிட்டு என்னிடம் இருந்து 40,000 ரூபாய் பணத்தையும் திருடிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து அதிரை காவல் துறையில் புகார் அளித்து உள்ளேன்" என்று அவர் கூறினார்.
"நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் நடுத்தெருவின் சாலையில் நின்றுகொண்டு இருந்தபோது இரு சக்கர வாகனங்களில் படு வேகமாக சென்ற இரு வாலிபர்களை குழந்தைகள்,வயதானவர்கள்,பொதுமக்கள் என பலரும் அதிகமாக நடமாடும் இப்பகுதியில் வேகமாக செல்ல வேண்டாம் என்று நல்ல முறையில் கூறினேன். அதற்க்கு அவர்கள் என்னை தகாத வார்த்தைகளில் திட்டிவிட்டு போய் விட்டனர்.இது குறித்து அவர்கள் இருக்கும் இடத்திற்குசென்று நல்லதற்கு தானே சொன்னேன் இதற்கு ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் திமிராக பேசிவிட்டு ஆட்களை வைத்து என்னை பலமாக தாக்கிவிட்டு என்னிடம் இருந்து 40,000 ரூபாய் பணத்தையும் திருடிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து அதிரை காவல் துறையில் புகார் அளித்து உள்ளேன்" என்று அவர் கூறினார்.
தம்பி பைசல் அஹமதுவைத் தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அது கண்டிக்கதக்க விசயம்..... அல்லாஹ் உங்களுக்கு பொருமையையும், பூரன சுகத்தையும் அல்லாஹ் தருவானாக...ஆமீன்...
பதிலளிநீக்குபொதுவாகவே நீங்கள் தேவையில்லாப்பிரச்சினையில் ஈடுபடுவது, பல முறை.VKM Store வாய்க்காலில் அமர்ந்து நம் ஊர் பெரிய மனுசங்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது, அதிகமாக மாற்றுமத்தினரோடவே தங்களின் நேரத்தைப்போக்குவது, தொழுகையின் பக்கமும் அல்லாஹ்வின் பக்கமும் நாட்டம் இல்லாமல் இருப்பது, அதிகமாக மாற்று மத சகோதர்கள் பேசுவது போல் , கெட்ட வார்த்தைகள் பேசுவதை இனியாவது தவிர்த்துக் கொன்டு அல்லாஹ்விக்கு அஞ்சி, அல்லாஹ்வின் பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்... அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக ஆமீன்
தாக்குதலுக்கும் கந்தூரி சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லையோ
பதிலளிநீக்குஇந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது... யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை....
பதிலளிநீக்கு